திண்டுக்கல், அக். 17: திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி சன்சாத் ஆதர்ஷ் யோஜனா மற்றும் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் 1000 மரக்கன்றுகள் நடும் விழா குட்டத்துப்பட்டியில் நடைபெற்றது. கல்லூரி தலைவர் ஆர்எஸ்கே. ரகுராம் தலைமை தாங்கினார்.
முதல்வர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். பங்குத்தந்தை ராஜா வரவேற்றார். விழாவில் திண்டுக்கல் எம்பி உதயகுமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், ஊர்மக்கள் பலர் கலந்து கொண்டனர்.