சபரிமலை பாரம்பரியத்தை காப்பாற்ற ஐயப்ப பக்தர்கள் அமைதி பேரணி

ஓசூர்,அக்.16: சபரிமலை ஐயப்பன் கோயில் பாரம்பரியத்தை காப்பாற்ற வலியுறுத்தி, அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் சார்பில் ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகில் நேற்று அமைதி பேரணி நடைபெற்றது. இப்பேரணி பெங்களூரு பைபாஸ் சாலை, காந்தி சிலை, ஏரித்தெரு, அரசு மருத்துவமனை, தாலுகாஅலுவலக சாலை உள்ளிட்ட வழியாக சென்று ஐயப்பன் கோயில் வளாகத்தில் முடிவடைந்தது. பேரணியில், ஐயப்பன் கோயில் பாரம்பரியத்தை காப்பாற்றவும், பெண்கள் செல்ல மாட்டோம் எனவும் ஐயப்பன் பக்தி பாடல்களை பாடியவாறு சென்றனர். பாஜ மாநில பொது செயலாளர் நரேந்திரன், கோட்டப் பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாநில இளைஞரணி செயலாளர் நாகராஜ், மாவட்ட தலைவர் முனிராஜ், மாவட்ட செயலாளர் ராஜீ, நிர்வாகிகள் விஷ்ணுகுமார், தேவராஜ், கிரண், மணி, தேர்பேட்டை முருகன், இளைஞரணி மாவட்ட பொருளாளர் பாலசந்தர், கலைவாணி, கஸ்தூரி, இந்திராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: