கிருஷ்ணகிரி, அக்.16: தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், வாணிஒட்டில் அணை கட்டக்கோரி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமை வகித்தார். சஙகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தோப்பையகவுண்டர், வண்ணப்பா, சுப்பிரமணிரெட்டி, நசீர்அகமத், முனிராஜ், பெருமா, நாராயணன், சின்னராஜ், ஜெகதீசன், திம்மராயன், கிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கிருஷ்ணகிரி திமுக எம்எல்ஏ செங்குட்டுவன், வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன் ஆகியோர் பங்கேற்று கோரிக்கையை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, வாணிஒட்டில் அணைகட்ட சர்வே செய்வதை வேகப்படுத்திட வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தென்பெண்ணை ஆற்றுநீர் கால்வாய் அமைத்து வழங்க வேண்டும். மேடான பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு மின்மோட்டார் மூலம் நீர்ரேற்றி கொடுக்க வழிவகை செய்ய வேண்டும்.