கும்பகோணம்,அக்.16: கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் 20,000 ஏக்கரில் மின்மோட்டார் உதவியுடன் குறுவை நடவுப்பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆடுதுறை 36, 45, சாவித்திரி 1009 உள்ளிட்ட நெற்பயிர்களை விவசாயிகள் நடவு செய்தனர். இந்நிலையில் கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. தற்போது பகலில் கடுமையான வெயில் அடித்த போதும், அதிகாலையில் பனிப்பொழிவு இருந்து வருகிறது. ேமலும் லேசான குளிர் காற்று அடித்ததால் பருவநிலை மாறி நெற்பயிரில் புகையான் நோய் தாக்கி வருகிறது. தற்போது குறுவை நெற்பயிர்கள் சூழ் பருவமான பால் பருவத்தில் இருக்கும் நிலையில் புகையான் நோய் தாக்கினால் பதராகி வீணாகிவிடும்.