பெரம்பலூர்,அக்.16: பெரம்பலூர் மாவட்டத்திற்கு 800 டன் யூரியா வந்தது. உரத்தை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) கலைவாணி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு மக்காச்சோள பயிரானது 55,962 ஹெக்டர் பரப்பளவிலும், பருத்தி பயிர் 13,266 ஹெக்டர் பரப்பளவிலும் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மக்காசோள பயிரானது 30 முதல் 40 நாள் பயிராக உள்ளது. இதுதான் மக்காசோள பயிருக்கு மேலூரம் இடுவதற்கு ஏற்ற நிலையாகும். பெரம்பலூர் மாவட்டத்தில் பயிர்களுக்கு தேவையான உரங்களை தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னையை சேர்ந்த மெட்ராஸ் பெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்திலிருந்து 1,230 டன் யூரியா உரமானது ரயில்மூலம் திருச்சிக்கு வந்தது. இதில் 800டன் யூரியாஉரம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.