திண்டுக்கல், அக். 16: திண்டுக்கல் அருகே மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டி பாக்கியலட்சுமி நகரை சேர்ந்தவர் லட்சுமி (60). கடந்த 13ம் தேதி இவரும் வீட்டு பணிப்பெண் பொன்செல்வி (42) வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி லட்சுமி அணிந்திருந்த நகைகளை பறித்து கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.