அறந்தாங்கி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் போட்டியிட 11 பேர் வேட்புமனு தாக்கல்

அறந்தாங்கி, அக். 12: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின்படி அறந்தாங்கி கூட்டுறவு விற்பனை சங்க தேர்தலில் இயக்குனர் பதவிக்கு முன்னாள் தலைவர் உள்ளிட்ட 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அறந்தாங்கி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இயக்குனர்களை தேர்வு செய்வதற்காக கடந்த வாரம் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் அதிமுக ஒன்றிய செயலாளர் பெரியசாமி உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் முன்னாள் தலைவரும், அமமுகவை சேர்ந்த சங்கிலிமுத்து கருப்பையா உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்ய அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து மதுரை ஐகோர்ட்டில் முன்னாள் தலைவர் சங்கிலிமுத்து மனுதாக்கல் செய்தார். அதில் தங்களை கூட்டுறவு சங்க தேர்தலில் இயக்குனர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்களின் மனுவை ஏற்ற ஐகோர்ட், கூட்டுறவு சங்க தேர்தலில் சங்கிலிமுத்துகருப்பையா வேட்புமனு நேற்று தாக்கல் செய்ய உத்தரவிட்டது.  அதன்படி நேற்று மாலை சங்கிலிமுத்து கருப்பையா, பழனியப்பன், அந்தோணிசாமி, கஸ்தூரி, சேவாத்தாள், ஆனந்தி, உடையப்பன், குப்புச்சாமி, பாலகிருஷ்ணன், வீரப்பன், கருப்பையா உள்ளிட்ட 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: