திருப்பூர், அக். 12: திருப்பூர் பி.என்.ரோடு புதிய பஸ் ஸ்டாண்ட் உழவர் சந்தை அருகே 5 முறை பொது மக்களின் போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருப்பூர் பி.என்.ரோடு புதிய பஸ்ஸ்டாண்ட், உழவர் சந்தை அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாலும், பள்ளி, கோயில்கள் உள்ளதாலும் இதனை மூட பொதுமக்கள் வலியுறுத்தினர். மக்களின் எதிர்ப்பை மீறி இந்த கடை திறக்கப்பட்டது. பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் 5 முறை திறக்கப்பட்டு பின்னர் மூடப்பட்டது.