விநாயகர் கோயில் பூட்டை உடைத்து திருட்டு போலீசார் விசாரணை கீழ்பென்னாத்தூர் அருகே

திருவண்ணாமலை, அக்.12: கீழ்பென்னாத்தூர் அருகே விநாயகர் கோயிலில் பூட்டை உடைத்து விளக்குகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை அடுத்த கொளத்தூர் கிராமத்தில் காசி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி காலையில் கோயில் வழியாக கிராம பொதுமக்கள் நடந்து சென்றுள்ளர். அப்போது கோயில் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து உடனடியாக ஊர் பொதுமக்களுக்கும், கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் கோயிலின் கதவினை திறந்து பார்த்்தபோது, கோயிலில் வைத்திருந்த பித்தளை அண்டா, தவளை, குத்துவிளக்கு 2, காமாட்சி அம்மன் விளக்கு ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: