மழைவேண்டி சுவாதி நட்சத்திர வழிபாடு ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில்

பெரணமல்லூர், அக்.12: பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் தேவி, பூதேவி, சமேத லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். பட்டாச்சாரியார் முகுந்தன் தலைமையில் மழைவேண்டியும், திருமணதடை மற்றும் கடன்தொல்லையிலிருந்து நீங்க யாக வேள்வி பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: