ராசிபுரத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ராசிபுரம், அக்.11: ராசிபுரத்தில், நெல்லை பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்களை, தமிழில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும், அபராத கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது போலீசார் தாக்குதல் நடத்தினர். இதில் மாணவிகள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

இதனை கண்டித்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், நேற்று காலை கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பல்கலை மாணவ, மாணவிகளை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷமிட்டனர்.

அரை மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு பின், அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: