ராசிபுரம், அக்.11: ராசிபுரத்தில், நெல்லை பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்களை, தமிழில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும், அபராத கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது போலீசார் தாக்குதல் நடத்தினர். இதில் மாணவிகள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.