திருச்செங்கோடு, அக்.11: திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்து வருகிறது. இதில், மாணவ, மாணவிகள் தங்கள் கண்டுபிடிப்புக்களை காட்சிக்கு வைத்துள்ளனர். இதில், திருச்செங்கோடு விவேகானந்தா வித்யாபவன் மாணவி லட்சுமிபிரியாவின் கண்டுபிடிப்பு அனைவரையும் கவர்ந்தது. காருக்குள்ளும், வீட்டிற்குள்ளும் ஏசி இயந்திரத்திலிருந்து வரும் நச்சுப்புகை உயிரிழப்புக்கு பெரிதும் காரணமாகிறது. உறங்கும்போது இது போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டால், உயிரிழப்பை தடுக்க முடியாமல் போகிறது. மாணவி லட்சுமி பிரியாவின் அறிவியல் கண்டுபிடிப்பு, மிகவும் சிறிய வகையில் கைக்கு அடக்கமானது. எலக்ட்ரானிக் சென்சார்கள் மூலம் இது வேலை செய்கிறது.