திருவண்ணாமலை, அக்.11: திருவண்ணாமலை அருகே போலி ஆவணம் தயாரித்து 77 சென்ட் நிலத்தை அபகரித்ததாக பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம், விவசாயி. இவருக்கு அதே பகுதியில் 77 சென்ட் நிலம் உள்ளது. இவரது தங்கை மலர். இவரது கணவர் மோகன். இருவரும் ஆரணி அருகே உள்ள ஒகையூர் கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாலசுந்தரத்துக்கு சொந்தமான 77 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து கடந்த 7.12.15ம் தேதி ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் மலரின் பெயரில் மோகன் பதிவு செய்துள்ளார். இதற்கு மலரின் உறவினர்கள் நேத்தப்பாக்கத்தை சேர்ந்த சிசுபாலன், சித்தேரியை சேர்ந்த பன்னீர்செல்வம், செய்யாறை சேர்ந்த எழுத்தர் ராமமூர்த்தி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.