ஐதராபாத் வழியாக புதுச்சேரியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு இன்று முதல் விமான சேவை

புதுச்சேரி, அக். 10:  புதுச்சேரியில் இருந்து ஐதராபாத் வழியாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு விமான சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது.

 புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையத்தில் இருந்து பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை இயக்கப்படுகிறது. இதனால் பல்வேறு தரப்பினர் பயன் அடைந்து வருகின்றனர். குறிப்பாக தொழில் நிமித்தமாக புதுச்சேரி வருவோர், சுற்றுலாவுக்காக வருவோர் இந்த விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளும் திட்டமிடப்பட்டு வருகின்றன. விமான ஓடு பாதையை மேம்படுத்தி அமைக்க தமிழக அரசிடம் பேசி, நிலம் கையகப்படுத்தும் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கிற்கு புதுச்சேரியில் இருந்து  ஐதராபாத் வழியாக இன்று முதல் விமான சேவை இயக்கப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து ஐதராபாத் சென்றவுடன் அங்கிருந்து நேரடியாக பாங்காக் செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பாங்காக் செல்வதற்கான டிக்கெட்டை புதுச்சேரியிலேயே பதிந்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.      

Related Stories: