பாவூர்சத்திரம் அருகே மினிலாரி மோதி வியாபாரி பலி

பாவூர்சத்திரம். அக்.10: பாவூர்சத்திரம் அருகேயுள்ள நாகல்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமையா மகன் திருமலைகுமார்(35). இவர் அப்பகுதியில் பீடிக்கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை வீட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக பாவூர்சத்திரத்திற்கு வந்துவிட்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் பாவூர்சத்திரம் மார்க்கெட் அருகில் சென்றபோது எதிரே பாவூர்சத்திரம் நோக்கி வந்த மினிலாரி, பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.இதில் திருமலைக்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த திருமலைகுமாருக்கு கனி என்ற மனைவியும் சக்தி என்ற மகனும் உள்ளனர்.

Related Stories: