பெண்ணை தாக்கிய டிரைவருக்கு வலை

பாகூர், செப். 26:    ஜூஸ் கடை நடத்தி வரும் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 கிருமாம்பக்கம் ஊரக்குளம் தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி (47). இவர் கிருமாம்பாக்கம்- கடலூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை எதிரே ஜூஸ் கடை வைத்துள்ளார். இந்நிலையில் சார்காசிமேடு பகுதியை சேர்ந்த ஹானஸ்ட்ராஜ் (24) என்பவர் கடை எதிரே அடிக்கடி தனது ஷேர் ஆட்டோவை நிறுத்தி வந்துள்ளார். கடை வியாபாரம் பாதித்ததால் ஆட்டோவை தள்ளி நிறுத்துமாறு ஜெயந்தி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹானஸ்ட்ராஜ் ஜெயந்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் ஜெயந்தி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார்

வழக்குப்பதிந்து ஆட்டோ டிரைவர் ஹானஸ்ட்ராஜை தேடி வருகின்றனர்.

Related Stories: