ஆசிரியர்களுக்கு விருது

கொடைக்கானல், செப். 25:  ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கொடைக்கானலில் குறிஞ்சி அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. சங்க பட்டய தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். சங்க தலைவர் ராம்மோகன் வரவேற்றார். பொறியாளர் ராமச்சந்திரன், ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் குத்தாலிங்கம், பட்டய செயலாளர் ராஜேஸ்கண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  பட்டிமன்ற பேச்சாளர் முல்லை நடவரசு பேசினார். விழாவில் 9 ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. புனித ஜான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சகோதாரி லூர்து மேரி நன்றி கூறினார்.

Related Stories: