ஈரோடு, செப். 21: ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான தென்னரசு தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் சென்னையில் வரும் 30ம்தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிறைவு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோடு மாவட்டத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் கட்சியினரும், பொதுமக்களும் திரளாக கலந்து கொள்வது, பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக 16 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைப்பது, ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப்பில் வரும் 25ம்தேதி நடைபெறவுள்ள கண்டன பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.