ஊட்டி, செப். 19: முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெங்குமரஹாடாவில் புலிக்கு விஷம் வைத்து கொன்றவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனங்களில் புலி, யானை, உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இது பாதுகாக்கப்பட்ட வனம் என்பதால், வன குற்றங்களை தவிர்க்கும் வகையில், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகம், சீகூர் வனச்சரகத்திற்குட்பட்ட தெங்குமரஹடா பகுதியில், கடந்த 2014ம் ஆண்டு இறந்த எருமை மீது விஷம் வைத்து, பெண் புலியை கொன்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.