சூடம் கொளுத்தி விளையாடிய சிறுமி பலி

சங்கரன்கோவில், செப்.12: கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள ராமலிங்காபுரத்தை சேர்ந்த இளங்கோ மகள் பிரதீபா (13). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மே மாதம் தனது வீட்டின் வாசலில் சூடன் கொளுத்தி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது உடையில் எதிர்பாராத விதமாக தீ பற்றியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் கடந்த ஜூலை மாதம் மீண்டும் காயம் குணமாகாததால் நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் காலை பிரதீபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: