பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

புதுச்சேரி, ஆக. 15: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த குடிதாங்கிசாவடி கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் (37). கட்டிட தொழிலாளி. இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. புதுச்சேரி கரையாம்புத்தூர் அடுத்த பனையடிகுப்பத்தில் உள்ள மைத்துனர் வீட்டில் கஜேந்திரன் குடும்பத்துடன் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று கஜேந்திரன், மைத்துனர் வீட்டிலிருந்து கரையாம்புத்தூர் நோக்கி பைக்கில் சென்றார். ஒரு பள்ளத்தில் பைக் ஏறி இறங்கியபோது பைக்கில் இருந்து கஜேந்திரன் தூக்கி வீசப்பட்ார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் இறந்தார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: