நடுரோட்டில் சிமெண்ட் லாரி கவிழ்ந்தது

திருபுவனை, ஆக. 15: புதுச்சேரியில் உள்ள குடோனில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மினிலாரி ஒன்று நேற்று காலை விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. மதகடிப்பட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டயர் வெடித்து மினிலாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் உயிர் தப்பினார். சாலையில் சிமெண்ட் மூட்டைகள் சிதறி கிடந்ததால் அங்கு அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருபுவனை போலீசார் விரைந்து சென்று கிரேன் மூலம் லாரியையும், சிமெண்ட் மூட்டைகளையும் அப்புறப்படுத்தினர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: