பத்திரப்பதிவு அலுவலகத்தில் சந்தன மரம் வெட்டி கடத்தல்

நாகர்கோவில், ஆக.15 : நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியின் பின்புறம் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் சந்தன மரங்கள் உள்ளன. நேற்று முன் தினம் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் இந்த வளாகத்தில் உள்ள சந்தன மரத்தை வெட்டி திருடி சென்றனர். இந்த அலுவலகத்துக்கு காவலாளிகள் உண்டு. நேற்று முன் தினம் பெண் காவலாளி தான் பணியில் இருந்தார். இரவு மழை பெய்து கொண்டு இருந்தது. அந்த பகுதியில் உள்ள சாலையில் தெரு விளக்குகளும் எரிய வில்லை. இதை பயன்படுத்தி சந்தன மரத்தை வெட்டி எடுத்து சென்று உள்ளனர். இது குறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: