பச்சமலையில் 16ம்தேதி சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்

துறையூர், ஆக.14:  பச்சமலை டாப்செங்காட்டுப்பட்டியில் வருகிற 16ம்தேதி கலெக்டர் தலைமையில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. துறையூர் அடுத்துள்ள பச்சமலையில் தென்பரநாடு ஊராட்சி டாப்செங்காட்டுபட்டியில் உள்ள சூழியல் பூங்காவில் வருகிற 16ம்தேதி சிறப்பு மக்கள்தொடர்பு முகாம் நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடந்த இந்த முகாமில் பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. முகாமில் அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்துகொண்டு தங்கள் துறையில் உள்ள திட்டங்களை விளக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை வருவாய்துறையினர் செய்து வருகின்றனர்.

Related Stories: