மண்ணச்சநல்லூர், ஆக.14: சமயபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையை மொபட்டில் கடந்து செல்ல முயன்றபோது விபத்தில் மூதாட்டி பரிதாபமாக பலியானார். இதில் இரண்டு குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பின. மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தளுதாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா (55). இவரது மனைவி மகேஸ்வரி (50). நேற்று முத்தையா தனது மனைவி மற்றும் பேரக்குழந்தைகள் கவின் (5), மதுஸ்ரீ(8) ஆகியோருடன் சமயபுரம் கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு மொபட்டில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கரியமாணிக்கம் பிரிவு ரோடு பகுதியில் ரோட்டை கடக்க முயன்றபோது பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் மொபட் மீது மோதியது.