தா.பேட்டை, ஆக.14: முசிறி அடுத்த தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு, விவசாயி. இவரது மகன் வெங்கடேஷ் (26). இவர் தனது முசிறிக்கு பைக்கில் சென்றபோது ரோட்டின் குறுக்கே நாய் வந்ததால் நிலைதடுமாறி தவறி கீழே விழுந்ததில் பலத்தகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் வெங்கடேஷ் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.