மணப்பாறை, ஆக.14: மருங்காபுரி ஒன்றியம் கார்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தாததை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் கார்வாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 180 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக கல்வித்துறை சார்பில் சுமார் 100 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது. கார்வாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி இப்பகுதியினர் கடந்த 10 வருடங்களாக போராடி வருகின்றனர். இதற்காக பொதுமக்கள் தங்கள் பங்களிப்பாக ரூ.1 லட்சம் மற்றும் 5 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளனர்.