சாத்தூர், ஆக. 14:சாத்தூர் அருகே, தந்தைக்கும் தம்பிக்கும் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். சாத்தூர் அருகே, நத்தத்துபட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (54). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பரமசிவம் (28). இவருக்கு லட்கமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். குடிப்பழக்கம் உள்ள பரமசிவம் வேலைக்கு போகாமல் மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.