பந்தலூர்: தமிழக- கேரள மாநில எல்லைப்பகுதியான வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி, கல்பட்டா, மானந்தவாடி,பனமரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால் வயநாடு மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக வயநாடு பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிர் செய்யப்பட்டுள்ள நெல்,வாழை உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் மழைவெள்ளத்தில் மூழ்கி சேதமாகியது. வாகனங்களும் மழைநீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.