ராமநாதபுரம், ஆக.14: ஆனந்தூர் தமுமுக சார்பில் கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில், ‘‘ஆனந்தூர் ஊராட்சியில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே தண்ணீர் வருகிறது. பரமக்குடி ரோடு பருதுல்லா நகர், பச்சனத்திக்கோட்டை போன்ற பல பகுதிகளில் மக்கள் தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். இதனை முறைப்படுத்தி அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும். மேலும் ஆனந்தூர் வழியாக பிற பகுதிகளுக்கு செல்லும் காவிரி குடிநீர் ஆனந்தூர் மக்களுக்கும் கிடைக்க செய்ய வேண்டும். இதேபோல், ஆனந்தூருக்கு வரும் பஸ் அனைத்தும் மிகவும் பழைய மோசமான நிலையில் உள்ளது. அடிக்கடி ரிப்பேராகி ரோட்டில் நின்று விடுகிறது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை.