குறுவட்ட போட்டி மாணவிகள் அசத்தல்

பட்டிவீரன்பட்டி, ஆக. 14: பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகள், வத்தலக்குண்டு வட்டார அளவில் நடைபெற்ற  19 வயதுக்கு உட்பட்டோருக்கான டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் பங்கேற்றனர். இதில் மாணவிகள் யுவபிரபா, சவுந்தர்யா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

மேலும், இவர்கள் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்து போட்டியிலும், 17 வயதுக்குட்பட்டோருக்கான கைப்பந்து போட்டியிலும் முதலிடம் பெற்று அடுத்த மாதம் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இம்மாணவிகளையும், பயிற்சியளித்த ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

Related Stories: