திண்டுக்கல், ஆக. 14: கண்டக்டர்கள் இல்லா பேருந்துகளில் அனுமதிக்காதது, நூறு நாள் வேலைத்திட்டத்தில் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நேற்று காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து இவர்கள் கூறுயில், ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன பணிகள் வழங்கலாம் என்று அரசாணை எண்52 விளக்குகிறது. ஆனால் இந்த அரசாணை திண்டுக்கல் மாவட்டத்தில் அமலாகாத நிலை உள்ளது. இதுகுறித்து கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினோம். இதன்படி மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் வேலை பார்த்தால் போதும். இதற்கு முழுச்சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்நிலை மாறிவிட்டது. வேலைநேரம் அதிகரிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரவில்லை.