திண்டுக்கல், ஆக. 14: திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்காக திண்டுக்கல்லில் நேற்றுமாலை அனைத்துக்கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. திமுக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர்கள் அர.சக்கரபாணி, ஐ.பி.செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் அப்துல்கனிராஜா, சிவசக்திவேல், திமுக அவைத்தலைவர் பஷீர்அகமது, தமாகா சார்பில் ராமதாஸ், சந்திரன், அதிமுக. நிர்வாகிகள் மோகன், சுப்பிரமணி, முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரம், திமுக துணைச்செயலாளர்கள் நாகராஜன், தண்டபாணி, திராவிடர் கழகம், சமூக நீதிஇயக்கம் உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். 14 வயதில் தமிழ்க்கொடி ஏந்தி 95 வயது வரை இருவண்ணக் கொடி பிடித்து பல்வேறு துறைகளிலும் சாதனை செய்தவர் கலைஞர் கருணாநிதி.