₹43 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ராசிபுரம், ஆக.14: ராசிபுரம் அடுத்த அக்கரைப்பட்டியில், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. நேற்று இங்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் பொரசல்பட்டி, சௌதாபுரம், வெண்ணந்தூர், குருசாமிபாளையம், வையப்பமலை, மல்லசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,041 மூட்டை சுரபி ரக பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் சுரபி ரகம் பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக ₹6,589க்கும், குறைந்த பட்சம் ₹5,836க்கும் ஏலம் போனது. ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 2,041 மூட்டை பருத்தி, ₹43 லட்சத்துக்கு ஏலம் போனது.

Related Stories: