காடையாம்பட்டி, ஆக.14: காடையாம்பட்டி அருகே, 8 பவுன் செயினை பறித்து சென்ற 3 பேரை பிடித்து ேபாலீசார் விசாரித்து வருகின்றனர்.காடையாம்பட்டி அருகே நாகியம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மனைவி அலமேலு (50). இவரது தங்கை கோதாவரி. இவரது கணவர் எல்லப்பன். அனைவரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் கோதாவரி, அலமேலு ஆடித்திருவிழாவையொட்டி சேலத்திற்கு சென்றிருந்தனர். நேற்று முன்தினம் இரவு, சேலத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பினர். வயல்வெளியியில் கோதாவரி, அலமேலு வந்துகொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த வாலிபர் திடீரென கோதாவரி கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பினார். அதில் தப்பியோடும் போது, ஒரு காலில் இருந்த செருப்பை தவற விட்டு ஓடினார்.