புதுச்சேரி, ஆக. 14: இந்திய சுதந்திர தினம் நாளை நாடு முழுக்க கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதல்கட்டமாக கடந்த 9ம் தேதி புதுவை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்களைக் கொண்டும், மோப்ப நாய் உதவியுடனும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து கிழக்கு பகுதி எஸ்பி (பொறுப்பு) மாறன் தலைமையில், ஓட்டல் உரிமையாளர்கள், மேலாளர்களுடன் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் 10ம் தேதி நடந்தது.