தாரமங்கலம், ஆக.13: தாரமங்கலம் அருகே சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. தாரமங்கலம் அருகே ஆரூர்பட்டி கிராமம் சேடப்பட்டி வானாங்கரடு பகுதியில், அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில், சர்க்கரை நோய் விழிப்புணர்வு மினிமாரத்தான் போட்டி நடந்தது. 2ம் ஆண்டு நடைபெறும் இப்போட்டியில் பள்ளி மாணவ, மானவிகள் இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டியை மாவட்ட ஊர்க்காவல் படை பெரியசாமி, தாரமங்கலம் இன்ஸ்ெபக்டர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.