சேந்தமங்கலம், ஆக.13: சேந்தமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர், துணைத்தலைவர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர். சேந்தமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின்(பிஏசிபி) 11பேர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் சந்திரசேகரன் தலைவராக, ஜெஸி துணைத்தலைவராக, சந்திரன், பெருமாள், துரைசாமி, கிருஷ்ணன், முருகேசன், மாதேஸ்வர், தங்கம்மாள், ராமசாமி, கென்னடி ஆகியோர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.