திண்டுக்கல், ஆக. 13: திண்டுக்கல் அடுத்துள்ள பித்தலைப்பட்டியை சேர்ந்தவர் அருள் ஞானபிரகாசம். இவரது மகள் கேசியாராணி(17). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள அ.வெள்ளோட்டில் திருவிழாவிற்கு செல்ல தனது சித்தி அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்த அருள்ஞான பாத்திமா(37)வுடன் டூவீலரில் சென்றார். டூவிலரை கேசியாராணி ஓட்டிச் சென்றார். திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை காப்பிக்கடை பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் டூவீலரில் மோதியது.