ஒட்டன்சத்திரம், ஆக. 13: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டியில் உச்சிமாகாளியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பெண்கள் பால்குடம், காவடி எடுத்து உச்சிமாகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இதற்காக கடந்த வெள்ளியன்று காலை சுமார் ஸ்ரீவேணுகோபாலசுவாமி திருக்கோவிலிலிருந்து பூனம்பட்டி ஆதினம் திருமடம், ஸ்ரீலஸ்ரீ ச.நடராஜ சுவாமிகள் தலைமையிலும், புலவர் ப.சின்னச்சாமி முன்னிலையிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குட காவடி எடுத்து ஊர் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து, உச்சிமாகாளியம்மனுக்கு பால் அபிஷேகம் நடத்தினார்கள்.