கண்ணமங்கலம், ஆக. 13: கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் கிராமத்தில் தண்ணீர் இன்றி கருகிய நெல் பயிர்களுக்கு விவசாயிகள் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் கிராமத்தில் விவசாயிகள் மழைநீரை நம்பி பெருமளவில் நெல் பயிரிட்டிருந்தனர். அதேபோல் ஏராளமான விவசாயிகள் பருவமழையை நம்பி துவரை, சோளம், வேர்க்கடலை உள்ளிட்டவைகளையும் பயிரிட்டுள்ளனர்.இந்நிலையில், வேலூர், திருவண்ணாமலை உள்பட வடமாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. இதனால் கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் பகுதிகளில் நெல், வேர்க்கடலை, துவரை, சோளம் போன்ற பயிர்கள் தண்ணீர் இல்லாததால் காய்ந்து வருகிறது. அறுவடைக்கு தயாராகும் நிலையில் இருந்த நெல் பயிர்கள் கருகி வருகிறது.