மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியவர் கலைஞர்

புதுச்சேரி, ஆக. 9:  புதுவை மாநில திமுக மருத்துவ அணி செயலாளர் டாக்டர் முத்துக்குமரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:  கழகத்தலைவரும், ஐந்து முறை தமிழக முதல்வருமாக பணியாற்றியவரும், தமிழகத்தின் தனிப் பெருந்தலைவருமான தலைவர் கலைஞர் மு.கருணாநிதி மறைவுக்கு மாநில மருத்துவ அணி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம். தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பாக இருக்க வலுவான அடித்தளத்தை இட்டவர் தலைவர் கலைஞர்.

மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி என்ற கொள்கையை செயல்படுத்த வித்திட்டவர். அரசு மருத்துவர்களுக்கு சர்வீஸ் கோட்டா முறையை கொண்டு வந்து அரசு மருத்துவக்கட்டமைப்பை வலுப்படுத்தியவர். கிராமப்புற மாணவர்களுக்கு, முதல்தலைமுறை பட்டதாரிகளுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பை ஏற்படுத்தியவர் . மருத்துவ நுழைவுதேர்வு முறையை நீக்கி ஏராளமான கிராமப்புறமாணவர்கள், ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பை ஏற்படுத்தியவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: