வியாபாரியை தாக்கி கடையை சூறையாடிய 2 பேர் கைது

புதுச்சேரி,  ஜூன் 21:  புதுவை கோரிமேடு, காமராஜர் நகர், குறிஞ்சி வீதியைச் சேர்ந்தவர்  சந்திரகுமார் (45). இவர் தனது வீட்டை ஒட்டி சிப்ஸ் கடை நடத்தி வருகிறார்.  சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த 4 பேர் பொருட்களை எடுத்து விட்டு காசு  கொடுக்கவில்லையாம். இதை அவர் தட்டிக் கேட்ட நிலையில் ஆத்திரமடைந்த கும்பல்  அவரை தாக்கி பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதுதொடர்பாக சந்திரகுமார் அளித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார்  வழக்குபதிவு செய்து திலாசுபேட்டை பிரசாந்த் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர். தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: