கிருஷ்ணகிரி, ஜூன் 21: கிருஷ்ணகிரியில் சர்வர் பிரச்னையால் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு விடிய, விடிய நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 10 மணிக்கு 300க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள், கலந்தாய்வு நடக்கும் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கிற்கு வந்தனர். ஆனால் இணையதள சர்வர் பிரச்னையால் கலந்தாய்வு தொடங்கவில்லை. இதனால் கலந்தாய்விற்கு வந்த ஆசிரிய, ஆசிரியைகள் செய்வதறியாமல் திகைத்தனர். இந்த பிரச்னையானது இரவு 10 மணி வரை நீடித்தது.