ரோம்: இத்தாலியில் பிரதமர் ஜியோர்ஜியா மலோனி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ள இத்தாலி அரசின் வரைவு அறிக்கையில், ‘இத்தாலி மக்கள் தங்கள் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளுக்கு ஆங்கிலம் அல்லது வெளிநாட்டு மொழிகளை பயன்படுத்தினால், ஒரு மில்லியன் யூரோக்கள் (1,08,705 டாலர்) வரை அபராதம் விதிக்கப்படும். எந்தவொரு வெளிநாட்டு மொழியையும் அலுவல் மொழியாக பயன்படுத்தக்கூடாது. ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழியைப் பயன்படுத்துவதால், இத்தாலிய மொழிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இத்தாலிய மொழிக்கு அவமானம் ஏற்படுகிறது.