தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, சேலம், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உளள்து என்று வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

Related Stories: