சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2022-23ம் ஆண்டின் வரவு-செலவு திட்ட அறிக்கையில், 1-04-2023 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு பொது நிறுவனங்களின் கொள்முதல்களுக்கும் ‘மின்னணு - கொள்முதல்முறை’ கட்டாயமாக்கப்படும். இதற்காக ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டவிதிகளில் தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்படும். புதிய ஒப்பந்த புள்ளி நடவடிக்கைகள் இனி //tntenders.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மின்னணு இணையதளமானது, தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம், விதிகளுக்கு இணங்க முற்றிலுமாக மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒப்பந்தப்புள்ளி பரிவர்த்தனையையும் நாள், நேரமுத்திரையுடன் உருவாக்கி, அறிக்கையாக பதிவு செய்யப்படும்.