லண்டன்: நாக சைதன்யா, ஷோபிதா துலிபாலா ஜோடி லண்டன் வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் நாக சைதன்யா. சமந்தாவும் நடிப்பில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் நாக சைதன்யா மீண்டும் காதலில் விழுந்திருப்பதாகவும் அவர் பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த ஷோபிதா துலிபாலாவை காதலிப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் இதை ஷோபிதா மறுத்து வந்தார். நாக சைதன்யாவும் இதை மறுக்கும் விதமாகவே பேசி வந்தார். ஆனால் தற்போது இருவரும் லண்டனில் விடுமுறையை கழித்து வருவது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் லண்டனில் உள்ள ரெஸ்டாரென்ட் ஒன்றுக்கு இவர்கள் சென்றுள்ளனர்.