புதுடெல்லி: ராணுவ தளவாடப்பொருட்கள் ஏற்றுமதியானது எப்போதும் இல்லாதவகையில் 2022-2023ம் ஆண்டில் ரூ.15,920கோடியாக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டிவிட்டர் பதிவில்,‘‘நாட்டில் ராணுவ தளவாடப்பொருட்கள் ஏற்றுமதியானது கடந்த 2018-2019ம் ஆண்டில் 10,745கோடியாகவும் இருந்தது. 2019-2020ம் ஆண்டில் ரூ.9115 கோடி மற்றும் 2020-2021ம் ஆண்டில் ரூ.8434கோடியாக இருந்தது.
