பேரவையில் நேற்று பாலக்கோடு அன்பழகன் (அதிமுக) பேசும்போது, காகிதத்தில் எழுதி வைத்திருந்ததை பார்த்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு பேசியதாவது: 1996ம் ஆண்டு சபாநாயகராக பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் இருந்தார். அவர், உறுப்பினர்கள் காகிதத்தில் எழுதிக் கொண்டு வந்து பேசக்கூடாது என்பார். புள்ளி விவரங்களை வேண்டும் என்றால் காகிதத்தில் குறிப்பு எழுதிக்கொண்டு வரலாம் என்பார். அதனால் உறுப்பினர்கள் அனைவரும் குறிப்பு வைத்து பேச முயற்சி செய்ய வேண்டும். அவை முன்னவர் துரைமுருகன்: உறுப்பினர்கள் எழுதிக் கொண்டு வந்து அப்படியே படிக்கக்கூடாது என்று சட்டம் உள்ளது. இப்போது எல்லோருமே அப்படித்தான் படிக்கிறார்கள்.